Monday 16 December 2013

என் அப்பா - சு.அக்‌ஷயா 10-ஆ



என் அப்பா
நான் ஜனித்த நேரத்தில்
அருகில் இல்லை......
ஆனால் எனது
முதல் குரல் கேட்டவர்.
விரல் பிடித்து நடக்கவில்லை
என்றாலும்
குரல் கொடுத்து ஊக்கம் தந்தவர்.
முதல் பிறந்த நாளில்
அருகில் இல்லை....
ஆனால்
பிறந்தநாள் வாழ்த்துகள்
என்ற ஒலியோடு
வாழ்த்து அட்டை அனுப்பியவர்.
பள்ளிக்கு முதல் நாள்
வரவில்லை,
ஆனால்......
என்னால் முடியும்
என்ற நம்பிக்கை தந்தவர்.
துக்கத்தில் என்
கண்ணீர் துடைக்கவில்லை
ஆனால்......
தோள் கொடுக்கும் தோழனானவர்
எல்லாமாகிய அப்பா
என் அருகில் இருப்பது எப்போது?

சு.அக்‌ஷயா 10-


உள்ளத்தின் உணர்வுகள் உண்மையாக வெளிப்படும் போது அது கவிதையாகிறது. அதை இக்கவிதையில் கண்டேன். கண்களை குளமாக்கி இதயத்தை கனமாக்கும் உணர்வுகளை தமிழால் வடித்து வைத்துள்ளார் அக்‌ஷயா. இந்த இதயத்தின் மென்மை இளைய தலைமுறைக்கு வேண்டிய ஒன்று. ரெ.ஐயப்பன்





5 comments: