Thursday 30 January 2014

தியாகிகள் தினம் - காந்தியடிகள் பற்றி சிறப்பு கவிதை








தியாகிகள் தினம்

காந்தியடிகள் பற்றி சிறப்பு கவிதை 


கதராடை கதிரவனே காட்டுவாயா உன் முகம் தனையே

கதராடை கதிரவனே
காட்டுவாயா உன் முகம் தனையே?
இந்தியாவின்
மேற்கில் உதித்த சூரியனே
மேற்கை வென்ற இந்தியனே
அரையாடை பக்கிரியே
அகிம்சையின் சர்க்கரையே
வாள்களை வாய்மை கொண்டு வென்றவன் நீ
தோட்டக்களை தோய்வின்றி கொன்றவன் நீ
வெள்ளை தேசம் கொள்ளையடித்ததை
வெள்ளெந்தியாக தடுத்தவன் நீ
ஆடு மாடாய் அறிவில் குறைந்து
அடிமை நாயாய் இருந்தவனை
ஊக்கம் கொடுத்து உறவை சொல்லி
படையாய் மாற்றிய் பகலவன் நீ
அகிம்சை என்னும்
ஆயுதம் கொண்டு
அடிமைச்சங்கிலி
உடைத்தவனே


சட்டம் மறுக்கும்
திட்டம் கொண்டு
சுதந்திர பட்டம் ஏற்றினாய்
வெள்ளை கூட்டத்திற்கு
சத்தியத்தால்
கட்டம் கட்டினாய்
காதி கொண்டு
நீதி வென்று
ஏழை வீட்டில்
நிதியை பெருக்கினாய்
இங்கிலாந்து
துணிகளையே
ஓரம் கட்டினாய்
சத்திலாத மனிதர் கொண்டு
உப்பு காய்ச்சினாய்
சட்டம் போடும் மனிதரையே
சாய்த்து காட்டினாய்

மதியை கொல்லும்
மதுவை தள்ள
கள்ளை மறுத்தாய்
கள்ளை கொண்டு
கொள்ளையடிப்போருக்கு
தொல்லை கொடுத்தாய்
கதர் துணியாலே - நாட்டில்
வெள்ளையடித்தாய்
உன் நெஞ்சின் நடுவே குளமாக்கி
உன் கண்ணீர் கொண்டு வளமாக்கி
ஒடுக்கப்பட்டோரை கொலுவாக்கி
கடவுளின் பிள்ளை என்றாயே
நாளும் நல்லோர் மனதில் நின்றாயே
இயந்திரத்தை வெறுத்தவனே
இதயங்களை நினைத்தவனே
மரத்து போன மனிதர்களை – உன்
இரக்க உனர்வால் இழுத்தவனே
நாடு பிரிந்து போனதனால்
நாட்டம் இழந்து போனாயோ?
மனிதம் செத்து போனதனால்
உன் உடலை விட்டு போனாயோ?
உனைக் கொன்ற தோட்டக்களுக்கும்
உன் இதயத்தில் இடம் தந்தவனே
ஒருமுறை மீண்டு வர மாட்டாயா?
வாழ்ந்து போன சத்தியமே
சரித்திரம் உனை பேசும் நித்தமுமே
கதராடை கதிரவனே
காட்டுவாயா உன் முகம் தனையே
ரெ.ஐயப்பன்



The most beautiful human being in the world
The real leader


The path of Gandhi
Check yourself
Need of the hour

Tuesday 28 January 2014

குடியரசு தினம்



குடியரசு தினம்
இன்று நாம் உரிமை பெற்ற தினம்
நாம் உரிமை பெற்றவர்கள்
ஆம் உரிமையை  விற்பதற்கு
சிந்தையை விற்றோம்,
சினிமா சந்தைக்கு.
கல்வியை விற்றோம் - காசுக்கு
மொழியை விற்றோம்,
அரசியல் பிழைப்புக்கு.
கடமையை விற்றோம்,
லஞ்ச காசுக்கு.
நாம் உரிமை பெற்றவர்கள்
ஆம் உரிமையை  விற்பதற்கு
கொள்கையை விற்றோம் கொள்ளைக்கு
அன்பை விற்றோம் ஆசைக்கு
பன்பை விற்றோம் பதவிக்கு
குணத்தை விற்றோம் மது குடிப்பதற்கு
நடிகனை தொடரும் மக்கள்
சிந்தனையில்லா சிக்கல்
எளிமையானது ஏளனம்
ஆசையானது காரணம்
கனவுகள் ஆனது தோரணம்
நாம் உரிமை பெற்றவர்கள்
ஆம் உரிமையை  விற்பதற்கு
அடிமையாவதையே உரிமை என்றோம்
சிந்திப்பதே நிந்திப்பதென்றோம்
காட்டு தர்பார்
நடத்தும் கோட்டான்களை
காண குயில்கள் என்றோம்
அடிவருடிகளாய் அடிபிடித்தோம்
அடிமையாய் தான் இருப்போம் என
அடம் பிடித்தோம்
குறுக்கு வழிகளிலே
நன்றாய் தடம் பதித்தோம்
தவறினால் தான் வெல்வோம்
என தினம் நினைத்தோம்
நண்பர்களே
சடை பிடித்த முடிகளை
தடை செய்ய மாட்டோமா?
அரியணை அசுத்தத்தை
சுத்தமாக்க மாட்டோமா?
கூண் விழுந்த முதுகெலும்பை
கூர்வாளாக்கமாட்டோமா?
பகுக்கும் கேள்விகளால்
யாகம் செய்யமாட்டோமா?
தீயன மிரட்டும் போது
பேயன சிலிர்க்க மாட்டோமா?
தோல்விகள் துளைத்த போதும்
நம்பிக்கையால் துளிர்க்கமாட்டோமா?
வளைந்த பாதைகளில்
தொலைந்த வெளிச்சத்தை
நுழைந்து தேடமாட்டோமா?
உணர்வுகளால் உரிமைச்சங்கை
உயர்த்தி ஊதமாட்டோமா?
நாம் உரிமை பெற்றவர்கள்
உரிமையை  விற்பதற்கல்ல
உரிமையை கற்பதற்கு
நாம் உரிமை பெற்றவர்கள்
கனவுகள் கட்டுவதற்கு
நாம் உரிமை பெற்றவர்கள்
கடமைகள் செய்வதற்கு
நாம் உரிமை பெற்றவர்கள்
உண்மையாய் வாழ்வதற்கு
ஆம் நாம் உரிமை பெற்றவர்கள்.
ரெ.ஐயப்பன்