Friday 21 March 2014

தேர்தல்






தேர்தல்
இது அரியணை பந்தயம்
வெல்வோர் ஆள்வது நிச்சயம்
அரசனும் ஆண்டியாகலாம்
ஆண்டியும் அரசனாகலாம்
பல்லாக்கு ராஜாக்களை
பக்கத்தில் பார்க்கலாம்
நாட்டுக்கு உழைப்போம்
என்ற சத்தங்களை கேட்கலாம்
ஒலிபெருக்கிகாரருக்கு
ஒளிமயமான காலமிது
அச்சகத்தார் காசு பார்க்கும் நேரமிது
இங்கு தாஜா செய்யாமல்
யாரும் ராஜா ஆக முடியாது
கைக்கூப்பும் மந்திரிகள்
காலில் விழும் மந்திரிகள்
கும்பிட்டு கும்பிட்டு கூண்
விழுந்த மந்திரிகள் – அனைவருமே
தேர்தல்களில் தந்திரிகள்.
இவர்கள் காலில் விழுவதே
நிமிர்ந்து நிற்க்கத்தான்
வாசனை வார்த்தைகளால்
ஆகாய கோட்டைகளை கட்டுவர்
வானவில் திட்டங்களை
வகை வகையாய் அடுக்குவர்
மக்கள் மதியிழக்க
மதுவினை அள்ளிவிடுவர்
தன் செல்வத்தில் கொஞ்சம்
கிள்ளி எறிவர்
மனசாட்சி வாக்குகளை விட
பனசாட்சி வாக்குகளையே நம்புவர்
சாதி வாக்குகளே சாதிக்கும் என்பர்
கரை வேஷ்டிகள் களை கட்டும்
சுய விளம்பரம் விண்ணை முட்டும்
போகாத ஊருக்கு வழி சொல்வர்
பெய்யாத மழைக்கு குடை பிடிப்பர்
போடாத திட்டங்கள்
இல்லாத பட்டங்கள்
அணி வகுக்கும்
உண்மையை நினைத்தாலோ
மனம் கணக்கும்
இங்கு மையின்
கரும்புள்ளிகளால் தான்
பெரும் புள்ளிகளே ஆகின்றனர்
ஆனால் இவர்களே
கரும்புள்ளிகள் ஆகும்போது
நாம் வெறும் புள்ளிகள் ஆகின்றோம்
மனம் நொந்து நொந்து சாகின்றோம்
ஆட்சிக்கட்டில்களை அசைத்தாலும்
காட்சிப் பொருட்களில் மாற்றமில்லை
நாம் சாட்சிகளாகவே இருப்பதுவும் தீரவில்லை
சாத்தான்களை சட்டம் செய்யவிட்டு
சத்தமின்றி இருக்கின்றோம்
கழுதை போல அத்தனையும் பொறுக்கின்றோம்
யுத்தம் ஒன்று தேவைதான்
நாம் நித்தம் வாழும் பூமியில்
துடைத்திடுவோம் அழுக்குகளை - துடைப்பத்தால்
தில்லி காட்டிய வழியில்
தீரர்கள் ஆவோம்
தீமையை ஒழிப்போம்
தீயாய்
நல்லன செய்யும் பேயாய் எழுவோம்
தேசத்தை நன்றாய் உழுவோம்.
ரெ.ஐயப்பன்
www.ayyappangeo.blogspot.com


 

Saturday 1 March 2014

உதயமாகு உனக்குள்ளே




உதயமாகு உனக்குள்ளே




வானம் உடைந்து போனாலும்
வாழ்க்கை உடைந்து போகாது
எண்ணம் உறுதியாய் இருந்தாலே
எதுவும் நமக்கு நேராது

உலகம் சுண்டிப்போனாலும்
உண்மை சுண்டிப்போகாது
நிஜத்தின் பக்கம் நீயிருந்தால்
உன் நிழல் கூட வென்றுவிடும்

எதிரிகள் சூழ்ந்து நின்றாலும்
உயிர்வலி உனக்குத் தந்தாலும்
நேர்மை வாளால் போர்தொடுத்தால்
படைகள் பயந்து ஓடிடுமே

சூரிய நெருப்பு அனணந்தாலும்
முயற்சியின் கூரிய நெருப்பு அனணவதில்லை
நீ எழுந்து நிற்கும் போதெல்லாம் - பூமி
உன் காலில் இருக்கத் தவறவில்லை




மேகம் மழை தர மறுத்தாலும்
இரக்கம் யாரையும் இழப்பதில்லை
கனிவை நீயும் கரம் பிடித்தால்
இறைவன் கதவுகள் அடைப்பதில்லை

புயல்கள் புகைந்து போய்விடலாம்
துணிவு உனக்குள் இருந்தாலே
போர்க்குணம் கொண்டு நின்றாலே – எதிரி
வாள்கள் வீழும் தன்னாலே

கடல்கள் வற்றிப்போனாலும்
கருனண வற்றிப்போவதில்லை
உதவிடும் எண்ணம் இருந்தாலே
நல் உறவுகள் வளரும் தன்னாலே

காட்டுத்தீயும் சிறு பொறிதான்
அடிமைத்தனத்தின் முன்னாலே
ஆதிக்கத்தை நீ எதிர்த்தாலே
ஆதவன் உனக்குப் பின்னாலே

கடலின் நீர்த்துளி எண்ணிடலாம்
ஆசைகள் எண்ணி முடிந்திடுமா?
பொருளின் பற்றை நீ விட்டால்
பொருட்டாய் வாழலாம் உயர்வினிலே


ஏளனக்குரல்கள் ஒலித்தாலும்
எளிமையாய் நீயிருந்தால்
வலிமையாவாய் உனக்குள்ளே
பூமி சிரிக்கும் உனக்காக
வாழ்வோம் புவியில் கணக்காக

வாழ்க்கை என்பது ஓர் பயணம்
பாதைகள் தொலைந்து போனாலும்
பயணங்கள் நின்று போவதில்லை

பிடிக்க முடியா உயிர்தனையே - உடலில்
பிடித்து வைக்கப் பார்க்கின்றோம்
கடந்து போகும் காலத்தை
விரைந்து கடக்கப் பார்க்கின்றோம்
வழிபோக்கனாய் வாழும் வாழ்க்கையிலே
உறவுகள், உரிமைகள், உடைமைகள் என
சுமைகள் தூக்கித் திரிகின்றோம்
நிஜத்தை நின்று பார்த்தாலே
நியும் நானும் ஒன்றே தான்
இதை உணர்ந்தால் நமக்கு நன்றே தான்
ரெ.ஐயப்பன்