Saturday 1 March 2014

உதயமாகு உனக்குள்ளே




உதயமாகு உனக்குள்ளே




வானம் உடைந்து போனாலும்
வாழ்க்கை உடைந்து போகாது
எண்ணம் உறுதியாய் இருந்தாலே
எதுவும் நமக்கு நேராது

உலகம் சுண்டிப்போனாலும்
உண்மை சுண்டிப்போகாது
நிஜத்தின் பக்கம் நீயிருந்தால்
உன் நிழல் கூட வென்றுவிடும்

எதிரிகள் சூழ்ந்து நின்றாலும்
உயிர்வலி உனக்குத் தந்தாலும்
நேர்மை வாளால் போர்தொடுத்தால்
படைகள் பயந்து ஓடிடுமே

சூரிய நெருப்பு அனணந்தாலும்
முயற்சியின் கூரிய நெருப்பு அனணவதில்லை
நீ எழுந்து நிற்கும் போதெல்லாம் - பூமி
உன் காலில் இருக்கத் தவறவில்லை




மேகம் மழை தர மறுத்தாலும்
இரக்கம் யாரையும் இழப்பதில்லை
கனிவை நீயும் கரம் பிடித்தால்
இறைவன் கதவுகள் அடைப்பதில்லை

புயல்கள் புகைந்து போய்விடலாம்
துணிவு உனக்குள் இருந்தாலே
போர்க்குணம் கொண்டு நின்றாலே – எதிரி
வாள்கள் வீழும் தன்னாலே

கடல்கள் வற்றிப்போனாலும்
கருனண வற்றிப்போவதில்லை
உதவிடும் எண்ணம் இருந்தாலே
நல் உறவுகள் வளரும் தன்னாலே

காட்டுத்தீயும் சிறு பொறிதான்
அடிமைத்தனத்தின் முன்னாலே
ஆதிக்கத்தை நீ எதிர்த்தாலே
ஆதவன் உனக்குப் பின்னாலே

கடலின் நீர்த்துளி எண்ணிடலாம்
ஆசைகள் எண்ணி முடிந்திடுமா?
பொருளின் பற்றை நீ விட்டால்
பொருட்டாய் வாழலாம் உயர்வினிலே


ஏளனக்குரல்கள் ஒலித்தாலும்
எளிமையாய் நீயிருந்தால்
வலிமையாவாய் உனக்குள்ளே
பூமி சிரிக்கும் உனக்காக
வாழ்வோம் புவியில் கணக்காக

வாழ்க்கை என்பது ஓர் பயணம்
பாதைகள் தொலைந்து போனாலும்
பயணங்கள் நின்று போவதில்லை

பிடிக்க முடியா உயிர்தனையே - உடலில்
பிடித்து வைக்கப் பார்க்கின்றோம்
கடந்து போகும் காலத்தை
விரைந்து கடக்கப் பார்க்கின்றோம்
வழிபோக்கனாய் வாழும் வாழ்க்கையிலே
உறவுகள், உரிமைகள், உடைமைகள் என
சுமைகள் தூக்கித் திரிகின்றோம்
நிஜத்தை நின்று பார்த்தாலே
நியும் நானும் ஒன்றே தான்
இதை உணர்ந்தால் நமக்கு நன்றே தான்
ரெ.ஐயப்பன்


 




No comments:

Post a Comment