Saturday 20 July 2013

வாலிக்காக



வாலிக்காக
வலிக்கிறதே வாலியின் மரணம்
இறைவா ஏன் இந்த தருணம்?
கிடைக்குமோ மீண்டும் ஓர் ஜனனம்
.......................................கவிதைகளுக்கு?
அழைப்பாயோ ரங்கராஜனை?
தருவாயோ தங்க ஆராதனை?
ராகமும் தாளமும் உன் கவிதையின்
செல்ல பிள்ளைகள்
அவர்களை அனாதையாக்கியது 
உன் மறைவு
தேசத்தின் சொத்து செல்கிறதே...........
இனி சத்துண்டோ வரும் கவிதைகளில்?
சக்தி அளி ஸ்ரீரங்கனே
எம் வாலி வாலிபனாக உயிர் எழட்டும்.
வ.மு.ஸ்ரீநிதி
12ம் வகுப்பு
டாக்டர்.ஜி.எஸ்.கே நினைவு பள்ளி
வார்த்தைகளின் பொறியாளனாய் எத்தனையோ உணர்வுகளுக்கு நாவு கொடுத்தவர் வாலி. அவரின் இழப்பு தமிழுக்கு மாபெரும் இழப்பு. 15000 திரைப்பாடல்கள் மட்டுமின்றி அவதார புருஷன், இராமானுஜ காவியம், பாண்டவர் பூமி போன்ற இலக்கியங்களையும் படைத்துள்ளார். அவருக்கு ஓர் அஞ்சலியாக ஸ்ரீநிதியின் கவிதை நம்மை உருகவைக்கிறது. அதுவே ஓர் தமிழ் கவிஞனுக்கு தரப்படும் கௌரவம். ரெ.ஐயப்பன்  




3 comments:

  1. Unmai! Unmai!
    Sharing the grief,
    vemanna, Dammam.

    ReplyDelete
  2. FABULOUS WORDS WHICH REALLY INSIST TO SPELL OUT TEARS!!!!!!

    ReplyDelete
  3. its awesome sir
    by
    aruna and gopika

    ReplyDelete