Sunday 14 July 2013

கர்ம வீரர் காமராஜ்



கர்ம வீரர் காமராஜ்

விருதுப்பட்டி தந்த
தங்கக் கட்டி நீ
விடுதலை போரில் சீறிப்பாய்ந்த சிங்கக் குட்டி நீ
காந்தி வழி நின்று 
கதராடை கொண்டாய்
காலனி ஆட்சியை எதிர்த்து
9 ஆண்டு சிறையில் நின்றாய்
மக்கள் பணி செய்வதற்கு 
இல்லம் துறந்தாய்
பாரதியின் வரிகளுக்கு
உயிர் கொடுத்தாய்
வீதி தோறும் பள்ளிகளை 
கட்டி வைத்தாய்
அங்கு மதிய உணவு உண்டு என சொல்லி வைத்தாய்
தமிழ் நாட்டிற்க்கு கிடைத்திடாத அறியவன் நீ
வறியவரின் துயர் துடைத்த பெரியவன் நீ
எத்தனையோ அணைகள் கட்டி நீரை தேக்கினாய்
தமிழகத்தின் வயல்களையே பசுமை ஆக்கினாய்
அத்தனையும் இழந்ததினால் வென்றவன் நீ
எளிமையையே ஏராளமாய் அணிந்தவன் நீ
மகுடத்தை உதறிவிட்ட மன்னவன் நீ
தமிழர் நெஞ்சில் என்றும் நிரந்தர முதல்வன் நீ  
ரெ.ஐயப்பன்


No comments:

Post a Comment