Thursday 13 August 2015

கவி அஞ்சலி



கவி அஞ்சலி
அக்னிச் சிறகுகளை
அலை தவழும்
மணலுக்கு தந்து விட்டோம்

அறிவின் சிகரத்தை
ஆழ் மணலில்
விதைத்து விட்டோம்

கலாம் என்னும்
கலா ரசிகனை
காலனுக்கு தந்துவிட்டோம்

கடுமையாக
உழைக்கச் சொன்னவனை
உறங்க சொல்லிவிட்டோம்

எளிமையாக
வாழ்ந்தவனை
எளிதாக இழந்து விட்டோம்

கலாம் உன் தொண்டு
நீள வேண்டும் – நாங்கள்
உனை கண்டு வாழ வேண்டும்
வருவாயா?
                        ரெ.ஐயப்பன்

No comments:

Post a Comment