Monday 16 February 2015

வெட்கம் இல்லா திருவரங்கம் தொகுதியின் வாக்காளர்கள்




வெட்கம் இல்லா திருவரங்கம் தொகுதியின் வாக்காளர்கள்
இந்த தலைப்பில் எந்த சந்தேகமும் இல்லை. கர்நாடக உயர் நீதிமன்றத்தால் குற்றவாளி என சான்றிதழ் வழங்கப்பட்டவரை தலைவராக கொண்டுள்ள கட்சிக்கு மீண்டும் பெருவாரியாக வாக்களித்துள்ளனர் என்றால் திருவரங்கம் தொகுதி வாக்காளர்களை வெட்கம் கெட்டவர்கள் என்பதை விட என்னவென்று சொல்வது. தில்லி மக்கள் இரு தேசிய கட்சிகளையும் புறக்கணித்துவிட்டு மாற்றாக ஆம் ஆத்மிக்கு வாய்ப்பளித்துள்ளனர் ஜனநாயகத்தை கெளரவப்படுத்தியுள்ளனர் ஆனால் இங்கோ என்ன விதமான கேவலத்தை அரசியலில் அரங்கேற்றினாலும் இரு திராவிட கட்சிகளுக்கு மட்டுமே ஓட்டளிப்போம் என்று கங்கணம் கட்டியுள்ள தமிழக வாக்களர்களை என்ன சொல்லி திட்டுவது? சுயேச்சைகளுக்கோ அல்லது நோட்டாவிற்கோ திருவரங்கம் வாக்காளர்கள் ஓட்டளித்து ஆளும் அரசுக்கு ஒரு எச்சரிக்கை மணியை அடித்து இருக்கலாம், அந்த வாய்ப்பையும் தவறவிட்டுள்ளனர். வாழ்க திருவரங்க வாக்காளர்கள்.
             தமிழன் என்று சொல்லடா
             தலை கவிழ்த்து கொள்ளடா

No comments:

Post a Comment